யாழில் வீடொன்றின் மீது வாள்வெட்டுக்குழு தாக்குதல்

யாழில் வீடொன்றின் மீது வாள்வெட்டுக்குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை, ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீட்டின் மீது வாள்வெட்டுக்குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3 மோட்டார்சைக்கிள்களில் சென்ற 6 பேர் குறித்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தெடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.