
நார்வேயில் பயணிகள் விமானம் மலையில் மோதி 141 பேர் பலி (29-8-1996)
நார்வே நாட்டில் மிகமோசமான விமான விபத்து 1996-ம் ஆண்டு இதே நாளில் (29-8-1996) நடந்தது. ரஷ்யாவின் நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மாஸ்கோவில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 29-8-1996 அன்று நார்வேயின் ஸ்வால்பார்ட் விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 130 பயணிகள், 11 விமான ஊழியர்கள்
நார்வே நாட்டில் மிகமோசமான விமான விபத்து 1996-ம் ஆண்டு இதே நாளில் (29-8-1996) நடந்தது. ரஷ்யாவின் நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், மாஸ்கோவில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 29-8-1996 அன்று நார்வேயின் ஸ்வால்பார்ட் விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 130 பயணிகள், 11 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். தரையிறக்கும்போது, விமானத்தை இயக்குவதில் ஏற்பட்ட சிறிய குளறுபடி காரணமாக, அருகில் உள்ள மலையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 141 பேரும் கொல்லப்பட்டனர்.
இதே ஆகஸ்ட் 29-ம் நாளில் நடைபெற்ற வேறு சில முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
1498 - வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
1825 - பிரேசிலைத் தனிநாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது.
1907 - கனடாவில் கியூபெக் பாலம் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 75 தொழிலாளர்கள் பலியாகினர்.
1944 - பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1949 - சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கஜகஸ்தானில் நடத்தியது.
1995 - முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
1997 - அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் திரைப்பட நடிகர் விஷால் (1977), அமெரிக்க பாடகர் மைக்கேல் ஜாக்சன் (1958) பிறந்த நாள்.