இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனலைதீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாதகலைச் சேர்ந்த குறித்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அத்துடன் கைப்பற்றப்பட்டுள்ள 5 கிலோ 500 கிராம் தங்கமும் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.