கிளிநொச்சியில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டி! பாடசாலை சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை
கிளிநொச்சியில் நேற்று மற்றும் இன்று இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் உந்துருளி என்பன மோதி விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்று காலை கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலைய கடவைக்கு அருகில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி விபத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்தோடு இரு பாடசாலை சிறார்கள் சிறு காயமுற்றுள்ளனர்.