
யாழ்ப்பாணம்-கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது..!
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த ஐந்து பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடியிருப்பதாக காவற்துறைக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த பகுதியில் காவற்துறையினர் நடத்திய தேடுதலின் போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 210 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திஸ்ஸமஹராம, பன்னகமுவ, தெபரவௌ ஆகிய பகுதிகளில் 696 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலின் போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.