யாழில் இடம்பெற்ற கொள்ளை! குற்றத்தடுப்பு பொலிஸாரின் தீவிர நடவடிக்கை

யாழில் இடம்பெற்ற கொள்ளை! குற்றத்தடுப்பு பொலிஸாரின் தீவிர நடவடிக்கை

சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி பகுதி வீடொன்றில் கடந்த வாரம் பகல்வேளை வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் 8 அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.

அதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாசியப்பிட்டியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.