
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை மறுதினம் மின் விநியோகம் தடை
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை மறுதினம் மின் விநியோகம் தடைப்படுமென மின்பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே மின் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி முள்ளி, மாவடி, வட்டு. இந்துக் கல்லூரி, சித்தங்கேணி சந்தி ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.