வாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977

வாயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள்: 05-09-1977

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சூரிய குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக வாயேஜர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், முதல் முறையாக செலுத்தப்பட்டதுதான் வாயேஜர் 1 விண்கலம். 722 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த விண்கலம், கேப் கனரவல் ஏவுதளத்தில் இருந்து 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஏவப்பட்டது. அன்று முதல் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து பயணம்

 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சூரிய குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக வாயேஜர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், முதல் முறையாக செலுத்தப்பட்டதுதான் வாயேஜர் 1 விண்கலம். 722 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த விண்கலம், கேப் கனரவல் ஏவுதளத்தில் இருந்து 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஏவப்பட்டது.

அன்று முதல் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும் இந்த விண்கலம், இப்போதும் பூமியில் இருந்து செலுத்தப்படும் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு திரும்ப தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. இந்த விண்கலம் 2025 வரை தொடர்ந்து வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

 


இதே நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1698 - ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர், தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்க உத்தரவிட்டான்.

1880 - ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1882 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

1887 - இங்கிலாந்தின் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் பலியாகினர்.

1905 - அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து ரஷ்ய-ஜப்பானியப் போர் முடிவுக்கு வந்தது.
 
1914 - முதலாம் உலகப் போரில், பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளை வென்றது.

1972 - ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
   
1980 - உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.

1990 - மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1872 - விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள்.