
யாழில் நவீன ரக நோயாளர் காவுவண்டி விபத்து
மந்திகை ஆதார வைத்தியசாலையின் நவீன ரக நோயாளர் காவு வண்டி குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே இன்று அதிகாலை1.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை ஆதார வைத்தியசாலை நோக்கி இருவருடன் பயணித்த வண்டி, யாழ் - பருத்தித்துறை பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகில் இருந்த கடை ஒன்றியையும் சேதப்படுத்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த வருடம் மத்திய சுகாதார அமைச்சினால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நவீனரக(BMW)அம்புலன்ஸ் வண்டியே விபத்தில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.