
கத்தி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது....!
யாழ்ப்பாணம் வடலியடைப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த சுற்றிவளைப்பின் போது 3 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிரப்படையினரால் 32 வயதான சந்தேகத்திற்குரியவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.