விபத்தில் பலியான 3 பிள்ளைகளின் தாய்...!

விபத்தில் பலியான 3 பிள்ளைகளின் தாய்...!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார் என  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தெல்லிப்பழை நோக்கி உந்துருளியில் சென்றுக்கொண்டிருந்த வேளையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான சதீனா என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, யாழ் போனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சுமார் 17 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.