யாழ்.குருநகரில் இன்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் ஒருவர் கைது

யாழ்.குருநகரில் இன்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் ஒருவர் கைது

யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் குருநகர் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

கடந்த வாரமும் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.