யாழில் திடீரென இரகசிய முற்றுகை! கைதாகிய இளைஞர்கள்

யாழில் திடீரென இரகசிய முற்றுகை! கைதாகிய இளைஞர்கள்

யாழ். கோண்டாவில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து - குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனையிடப்பட்டது.

இதன் போது குறித்த வீட்டில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய - வீட்டில் இருந்த ஐந்து இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.