
புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சிப்பட்டறை ESOFT யாழ் வளாகத்தில் (14/09/2020) இன்று ஆரம்பம்
இலங்கை அரசினால் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களிற்கேற்ப யாழ் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை ESOFT Metro Campus யாழ் வளாகத்தில் 14.09.2020 இன்று முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறி மூலம் பட்டதாரிகளுக்கு ஆளுமை விருத்தி, நிர்வாக முகாமைத்துவம், கணனி சார் தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி விருத்தி, தலைமைத்துவம், தொடர்பாடல் திறன் விருத்தி, மென்திறன் விருத்தி தொடர்பான பயிற்சிகள் ESOFT விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் சார் வல்லுனர்களினால் எதிர்வரும் 3 வாரங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப் பயிற்சி பட்டறை மூலம் சுமார் 120 இற்கு மேற்பட்ட பட்டதாரிகள் பயனடைய உள்ளனர்.