மருதானை – கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம்புரள்வு
மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.