
முச்சக்கரவண்டியில் பெண்ணொருவரை கடத்திச்சென்ற நபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை முச்சக்கரவண்டிக்குள் வைத்து கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் இன்னுமொரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணை நேற்றிரவு முச்சக்கரவண்டியில் வைத்து கடத்திச் சென்றுக்கொண்டிருந்த போது காலி-ஹெவ்லாக் வீதிக்கு அருகே முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி ஆறொன்றிற்குள் வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து முச்சக்கரவண்டிக்குள் இருந்த மூவரையும் காவல்துறையினர் மீட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
தொழிலுக்குச் சென்ற கணவன் வரும்வரையில் குறித்த பெண் காத்திருந்த போதே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.