வனவிலங்கு திணைக்களத்தின் கடமைகளை கோரும் வெல்லவாய பிரதேச மக்கள்
வனஜீவராசிகளுடன் தொடர்புடைய கடமைகளை தமக்கு வழங்குமாறு வெல்லவாய பிரதேச மக்கள் சிலர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இன்னும் சரியான தீர்வு கிடைக்காமையே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது
வெல்லவாயா - திக்கல்யாய பகுதி மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், காட்டு யானைகள் நேற்று இரவு கிராமத்திற்குள் புகுந்து சொத்துக்களையும் பயிர்களையும் சேதப்படுத்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.