சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ஆம் திகதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், இது குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த  4 மாவட்டங்களிலும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், அம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் என்பன மதியம் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.