
சீனா புறமுதுகில் குத்தியுள்ளது: சமாதான பேச்சுவார்த்தைக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா!
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள தாம் விரும்புவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் போது இதனை தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சீனாவுடன் இணைந்து சரியான பாதையில் பயணிக்கலாம். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இராஜாங்க ரீதியிலும், இராணுவ வழியாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இரு நாடுகள் இடையேயும் போதிய வசதிகள் உள்ளது.
தூதரக அதிகாரிகள், இராணுவ மட்டத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவே சீனா விரும்புகிறதென அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவ வீரர்களும் நேற்று முன்தினம் கடுமையாக மோதிக் கொண்டதில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
சீன தரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வர இறங்கி வருவதற்கு தயாராக இருந்தாலும், கடந்த காலங்களில் சீனா இதுபோல ஆசை வார்த்தை கூறி விட்டு, தனது இராணுவ பலத்தை எல்லைகளில் அதிகரித்து வந்துள்ளதே உண்மை. அவர்களுக்கு முதுகில் குத்துவது புதிது கிடையாதென இந்தியா பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது