
பேருந்தில் பயணித்த கணவன் மனைவிக்கு கொரோனா -அலறியடித்து ஓடிய பயணிகள்
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த கணவன் - மனைவிக்கு கொரோனோ தொற்று உறுதி என தொலைபேசி வந்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள், நடத்துனர், ஓட்டுனர் என அனைவரும் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது, கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்தனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவர்கள் வேறொரு இடம் செல்ல பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது சுகாதார ஊழியர்கள் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை மொபைலில் அழைப்பு விடுத்து தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தொலைபேசியினை நடத்துனரிடம் கொடுத்துள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி என்ற தகவலை தெரிவித்துள்ளார். எனவே அவர்களை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார் . இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் அவர்களை கீழே இறக்கிவிட்டார்.பேருந்தில் இருந்த சக பயணிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனைவரும் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். அதன்பிறகு பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.