நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மரண எண்ணிக்கை அதிகாிப்பு!

நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மரண எண்ணிக்கை அதிகாிப்பு!

நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தர்கநாகர் பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி மரணமடைந்தார்.

களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் நோய் தொற்றுடன், நீரிழிவு நோய் தீவிரமடைந்து இரத்தம் விசமடைந்தமையின் காரணமாக அவர் மரணமானதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹோமாகம பகுதியை சேர்ந்த 59 வயதான ஆணொருவர் அம்பன்பொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டமையை அடுத்து தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கொவிட் காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நிலைமையினால் அவர் நேற்று மரணித்தார்.

இதேவேளை, கொழும்பு 5 பகுதியை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் நேற்று மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பீட வைத்தியசாலையில் தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மரணமானார்.

ஆஸ்துமா மற்றும் கொவிட் காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நிலைமை அவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலேவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்த ஒருவர் நேற்று முன்தினம் மரணித்தார்.

கலேவெல பகுதியை சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

கொவிட்19 நோயுடன், சிறு நீரகதொகுதி கோளாறு நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்; பெல்மடுல்ல பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணித்துள்ளார்.

கொரோனாவுடன், இரத்தம் விசமடைந்தமை மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட நோய் நிலை காரணமாக அவர் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.