
இன்றைய வானிலை...!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணி முதல் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.