பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்வுகள்...!

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்வுகள்...!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்வுகள் இன்றும் இடம்பெறவுள்ளன.

கண்டி மற்றும் குருநாகல் மாவட்ட செயலகங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

இதேநேரம், பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகளை நாளைய தினம் நிறைவுசெய்வதற்கு அரசாங்க அச்சுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

தற்போது எஞ்சியுள்ள கம்பஹா மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சிட்டு நிறைவு செய்யப்பட்ட கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க உள்ளதாக அச்சகமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.