
நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறாக கொவிட் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்..!
நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறாக கொவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மற்றும் நடைபெறாத தினங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த பரிசோதனையில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணிக்குழாமினருக்கும் கோரப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்திக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என தெரியவந்துள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு தொற்றுறுதியானமையை அடுத்து அவருடன் தொடர்பை பேணியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்திக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.