கொழும்பு சென்ற பஸ்ஸில் நடந்த விபரீதம்; பெண்களே அவதானம்!

கொழும்பு சென்ற பஸ்ஸில் நடந்த விபரீதம்; பெண்களே அவதானம்!

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த பெண்கள் இருவர் தாங்கள் அணிந்திருந்த தங்கநகைகளை பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் பயணித்த பெண்கள் இருவரையும் மயக்கமடையச் செய்து, அவர்களின் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞனை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்கள் இருவருடனும் பழக்கம் பிடித்த இளைஞன் ஒருவன் அவர்கள் சாப்பிடுவதற்கு ரோல்ஸ் வழங்கியுள்ளான்.

அதனை உட்கொண்டவுடன் பெண்கள் இருவரும் மயக்கமடைந்ததாகவும், அதன் பின்னர் மயக்கம் தெளிந்தபின் பார்த்தபோது, தாங்கள் அணிந்திருந்த தங்கநகைகளை காணவில்லையென்றும் சாலியவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறும் என்பதனால் பஸ்களில் அடையாளம் தெரியாத நபர்களுடன் பழக வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அடையாளம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.