தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானம்..!

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானம்..!

கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று பிற்பகல் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சாதகமான தீர்வு கிடைத்தமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது