
முத்துராஜவலை சரணாலயம் சுற்றாடல் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பு
முத்துராஜவலை ஈரவலய சரணாலயத்தை உடனடியாக சுற்றாடல் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஈரவலய சரணாலயத்தின் சுற்றுச்சூழல் கட்டமைப்பை பல்வேறு தரப்பினர் கடந்த நாட்களில் சேதமாக்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கமைய அதி முக்கியத்துவமிக்க குறித்த சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாப்பதற்காக முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்