
நாட்டில் நேற்று பதிவான கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் திருகோணமலையில்!
நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியான 314 பேரில் அதிகளவானோர் திருகோணமலை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 52 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 30 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 29 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 28 பேரும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 8 ,490 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய நாட்டில் இதுவரை 8 லட்சத்து 38 ஆயிரத்து 355 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன