
வேதன அதிகரிப்பு கோரி சில தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சில தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் வேதனத்தை 15 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை வேதனத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் ஆரம்பமாக இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் பேரணியாக நிதியமைச்சு வரை சென்றிருந்தது.
இதன் காரணமாக கொழும்பு - நகரமண்டபம் பகுதி மற்றும் புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சுகாதார சேவையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்