
மஸ்கெலியாவில் 13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கு
மஸ்கெலியா – காட்மோர் பகுதியில் 13 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில் 11 மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்மோர் - கல்கந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய போது குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது