டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம்!

டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம்!

தலவாக்கலை டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் நீரில் மிதந்துகொண்டிருந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை  மீட்கப்பட்டதாக திம்புல பத்தன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட சடலம், கடந்த 6 நாட்களுக்கு முன்னர் டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் வீழ்ந்து காணாமல்போயிருந்த, பத்தனையை சேர்ந்த மலர்விழி என்ற பெண்ணொருவரினுடையது என அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜூலை 18 ஆம் திகதி டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து 19 வயதான யுவதியொருவரும் காணாமல்போயிருந்த  நிலையில் அவர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவல்களும் அறியக்கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திம்புல பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.