
சூரியவெவ பிரதேசத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
சூரியவெவ - வெவேகம பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மதியம் காவல்துறையினர் சந்தேகநபர்கள் சிலரை கைதுசெய்வதற்கு சென்றிருந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் காவல்துறை அதிகாரிகள் பயணித்த ஜீப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் 5 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.