கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 7 பேர்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 7 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.<br /><br />அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2048ஆக அதிகரித்துள்ளது.<br /><br />இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730ஆக அதிகரித்துள்ளது.<br /><br />அத்தோடு இதுவரையில் 671 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.