
யாழில் துண்டுபிரசுரங்கள் விநியோகித்த இருவர்: பொலிஸாரால் கைது
நாடளாவிய ரீதியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் , துண்டுபிரசுரங்கள் கொண்டுச் சென்ற மூவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார்,
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாகனத்தில் சென்று அங்கஜன் இராமநாதனின் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்ய முற்பட்ட வேளையில் இவ்வாறு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.