பதின்ம வயது சிறுமியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம்; தந்தையின் நண்பரின் மோசமான செயல்

பதின்ம வயது சிறுமியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம்; தந்தையின் நண்பரின் மோசமான செயல்

  தனமல்வில பிரதேசத்தில் 15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒரு குடிகாரர், சிறுமியின் தந்தையுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானவர் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் த்ப்டர்பில் மேலும் தெரியவருகையில்,

பதின்ம வயது சிறுமியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம்; தந்தையின் நண்பரின் மோசமான செயல் | Teenage Girl Threatened And Abused

கடந்த 19 ஆம் திகதி, இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு, தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​சந்தேக நபர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை பயமுறுத்தி, வீட்டின் தோட்டத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி வீட்டில் இல்லாததை உணர்ந்த தந்தை, இதுகுறித்து விசாரித்தபோது, ​​சிறுமி அருகிலுள்ள புதரிலிருந்து வந்திருப்பதைக் கண்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறிய பிறகு, தாயும் சிறுமியும் தனமல்வில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்தனர்.

சந்தேக நபரான அண்டை வீட்டார், தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளதுடன்,   சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.