மனைவியை வெட்டிகொன்ற கணவன்; அதிர்ச்சியின் உறவினர்கள்

மனைவியை வெட்டிகொன்ற கணவன்; அதிர்ச்சியின் உறவினர்கள்

 குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில்   இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மனைவியை வெட்டிகொன்ற கணவன்; அதிர்ச்சியின் உறவினர்கள் | Srilanka Husband Kills Wife

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு பாடசாலை செல்லும் இரு பிள்ளைகள் (மகள் 11 - மகன் 13) இருப்பதாக தெரியவந்துள்ளது.

கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், கைது செய்யப்பட்டுளதுடன்  சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.