இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 26ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஒரு லட்சத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை மூலம் வழங்கப்படவுள்ளன. 

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு | Announcement From The Central Bank Of Sri Lanka

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.