
காலி கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்
காலி அருகே கடற்கரையில் இன்று காலை அடையாளம் தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, கஹவ கடற்கரையிலேயே குறித்த சடலம் இன்று(18) அதிகாலை வேளை கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலத்தின் முதுகுப்புறமாக வலது தோற்பட்டை அருகே ஆந்தையொன்றின் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இடது தோற்பட்டையிலும் இன்னொரு பச்சை குத்தப்பட்டுள்ளது. குறித்த சடலம் கடற்தொழிலாளர் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இரண்டொரு நாட்களுக்கு முன்னதாக அவர் படகில் இருந்து தவறிக் கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.