கொழும்பில் கோர சம்பவம் - தமிழ் தம்பதி பலி

கொழும்பில் கோர சம்பவம் - தமிழ் தம்பதி பலி

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை ரயில் பாதையில் நேற்றையதினம் பயணித்த தம்பதியினர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் இந்த தம்பதி மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பதுளை, பதுளுபிட்டியவைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது.

சடலங்கள் களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் கோர சம்பவம் - தமிழ் தம்பதி பலி | Married Couple Dies In Dehiwala Railway Track

இது தற்செயலான விபத்தாக அல்லது உயிரை மாய்க்கும் செயற்பாடா என்பது குறிபத்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.