வயோதிப பெண்ணின் உயிரை பறித்த சந்தேகநபர்கள் ; வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரம்

வயோதிப பெண்ணின் உயிரை பறித்த சந்தேகநபர்கள் ; வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரம்

கம்பஹாவில் மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று  (04) காலை இடம்பெற்றுள்ளது.

வயோதிப பெண்ணின் உயிரை பறித்த சந்தேகநபர்கள் ; வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரம் | Elderly Woman Brutally Attacked Gold Missingமஹாபாகே, கெரகஹபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகளும் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளி வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளி தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.