சுத்தம் பேணப்படாத உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு 5 வருட சிறை

சுத்தம் பேணப்படாத உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு 5 வருட சிறை

மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சுத்தம் பேணப்படாத உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு 5 வருட சிறை | Unsanitary Restaurant Sentenced 5 Years In Prison

மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகரினால் குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது, தலையுறை பயன்படுத்தாமை, மருத்துவ அனுமதி பெறாமை, உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப்படுத்தியமை, கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை, சுத்தம் பேணப்படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.