
பெண்ணின் சங்கிலி அறுத்தவரை தேடுகிறது பொலிஸ்!
வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்ய கிரிபத்கொடை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த 03 ஆம் திகதி காலை கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிரிபத்கொடை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையிட்ட தங்க மாலையின் மொத்த பெறுமதி 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பொலிஸார், சந்தேக நபர்களின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். புகைப்படத்தில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 071-8591606 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.