வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.

உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளார்.

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம் | Youth Faces Tragedy At Vatrappalai Festivalசெவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

பலியான இளைஞன் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.