பித்தப்பை வெடித்ததால் அறுவை சிகிச்சை மருத்துவர் உயிரிழப்பு ; இலங்கையில் துயரம்

பித்தப்பை வெடித்ததால் அறுவை சிகிச்சை மருத்துவர் உயிரிழப்பு ; இலங்கையில் துயரம்

 வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஒருவர், பித்தப்பை வெடித்ததால் திடீரென உயிரிழந்ததாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணரான துமிந்த சமன் குமார என்று வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நயனஜித் பண்டார தெரிவித்தார்.

பித்தப்பை வெடித்ததால் அறுவை சிகிச்சை மருத்துவர் உயிரிழப்பு ; இலங்கையில் துயரம் | Surgeon Dies After Gallbladder Bursts Sri Lanka

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வத்துபிட்டிவல மருத்துவமனையில் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார்.

மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​ திடீரென உயிரிழந்ததாக வத்துபிட்டிவல மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நயனஜித் பண்டார தெரிவித்தார்.

சடலத்தின் பிரேத பரிசோதனை புதன்கிழமை (11) மதியம் நடைபெற்றது. சம்பவத்தில் கடுவல, கொரத்தொட்ட வீதியைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் துமிந்த சமன் குமார இறக்கும் போது 49 வயதுடையவர்.

அவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். வத்துபிட்டிவல மருத்துவமனையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஐம்பது ஏழை கண் நோயாளிகளுக்கு 50 உள்விழி லென்ஸ் மாற்று அறுவை சிகிச்சைகளை நிபுணர் டாக்டர் துமிந்த சமன் குமார நாளை செய்யவிருந்ததாக கூறப்படுகின்றது.