கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13.06.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட-மத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு, புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Tamil

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும் எனவும், சிலாபம் முதல் புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. அளவில் இருக்கும், ஆனால் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. அளவில் இருக்கும்.

பொதுமக்கள் வானிலை மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.