பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 26 மாணவர்கள் கைது

பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட 26 மாணவர்கள் கைது

முகநூல் (Facebook) ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (15.06.2025) அதிகாலை பாணந்துறை – மஹபெல்லன பகுதியில் இடம்பெற்றுள்ளது

கைது செய்யப்பட்டவர்களில் தனியார் பல்கலைக்கழகமொன்றில் பயிலும், 10 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் 16 பேரிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்படும் வேளையில் கைதான அனைவரும் போதைப்பொருளை பயன்படுத்தி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல் அவசர அழைப்புக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அலுபோமுல்ல காவல்துறையினரால் இன்று அதிகாலை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.