
முல்லைத்தீவில் காணாமல் போயிருந்த மீனவர் மரணித்ததாக அறிவிப்பு
முல்லைத்தீவில் தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (19) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல் நடத்தியும் எதுவும் கிடைக்காத நிலையில் குறித்த மீனவர் இறந்திருப்பதாக உறவினர்கள் அறிவித்து கிராமத்தில் கண்ணீர் அஞ்சலி செய்வதற்கான ஏற்பாட்டினை அறிவித்துள்ளார்கள்.
62 அகவையுடைய வின்சன்ரிப்போல் அன்ரனி கர்னல் (அருமை) என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மீனவர் காணாமல் போனமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.