
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோட்டார் சைக்கிள் சாலையை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.