துறைமுக நகர செயற்கை கடற்கரையில் பல்கலை மாணவனுக்கு நடந்த விபரீதம்

துறைமுக நகர செயற்கை கடற்கரையில் பல்கலை மாணவனுக்கு நடந்த விபரீதம்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கை கடற்கரையில் கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துறைமுக நகர செயற்கை கடற்கரையில் பல்கலை மாணவனுக்கு நடந்த விபரீதம் | Tragedy Hits University Student At Port City

காணாமல் போனவர் அஸ்கிரிய, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று நேற்று (26) செயற்கை கடற்கரைக்கு வந்துள்ளனர்.

இதன் போது கடலில் நீந்திக் கொண்டிருந்த கொண்டிருந்த மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த உயிர்காப்பு உடையை உயிர்காப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படை பிரிவு ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.