
திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தமது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சசிகலா ரவிராஜின் மகள் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேபோன்ற கருத்தை அவரது மகனும் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கு தேர்வில் இரண்டாம் இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டநிலையில் திடீரென நான்காவது இடத்தில் இருந்த சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே ரவிராஜின் மகளும் மகனும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.